புன்னகை


உயிரை கையில்
ஏந்துகிறாய்
என் வாழ்க்கையில்
ஒளியாய் வீசுகிறாய்

உன் புன்னகை ஒன்றே
போதுமடி
என் வாழ்க்கையில்
நீ தான் எல்லையடி...

காலம் முழுக்க
காத்திருப்பேன் என்
காதலிலே நீ
பூத்துவிட்டாய்..

பட்டாம்பூச்சி பார்த்திட
வேண்டும்
உன் புன்னகை கண்டு
ஓடிட வேண்டும்

உன் கையை பிடித்து
வாழ்ந்திட வேண்டும்
வாழ்ந்தது போக
செத்திட வேண்டும்

இந்த வாழ்க்கை
ஒன்றே போதுமடி
எந்த ஜென்மத்திலும்
நீ தான்
என் வாழ்க்கையடி...

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

புன்னகை ஒன்றே போதும் உட்பட வரிகள் ரசிக்க வைத்தது... வாழ்த்துக்கள்...